ஏவுகணை தாக்குதல் நடத்திய சிரியா; குண்டு வீசி பதிலடி கொடுத்த இஸ்ரேல்!
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய சிரியா நாட்டின் மீது குண்டு வீசிய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-சிரியாவிற்கு இடையே மோதல்
இஸ்ரேல் மற்றும் சிரியாவிற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளில் எல்லைகளில் அவ்வப்போது ராணுவ வீரர்கள் மோதிக் கொள்வது தொடர்ச்சியாக நடக்க கூடிய ஒன்றாகும்.
இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தினர் கொண்டாடும் ரமலான் மாதம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5-ஆம் திகதி ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் முகமூடி அணிந்த சிலர் இரவு முழுவதும் வழிபாட்டு தளங்களில் தங்கியுள்ளனர். மேலும் அவர்கள் கற்கள் மற்றும் தீ பற்றக்கூடிய பொருட்களை வைத்துள்ளனர்.
@ifp
மறுநாள் காலை யூதர்கள் டெம்பிள் மவுண்ட் வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 5-ஆம் திகதி இரவு அல்-அக்சா மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கு தங்கி இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
@afp
இதனால், இஸ்ரேலிய படையினருக்கும், சிரியாவிற்கும் இடையே இடையே அல் அக்சா வழிபாட்டுத் தலத்தில் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
அல் அக்சா வழிபாட்டு தல மோதலையடுத்து சிரியாவின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
காசா முனையிலிருந்து வீசப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்தபோது, வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து லெபனான் நாட்டிலிருந்தும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
@cnn
லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹமாஸ் ஆயுதக்குழுவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் இருந்து 6-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது.
@afp
இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணைகள் நடுவானில் வீழ்த்தியது. சிரியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பீரங்கி மூலம் சிரியா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.