சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் ஓய்வு! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
33 வயதான இசுரு உதான, இதுவரை இலங்கை அணிக்காக 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, துடுப்பாட்டத்தில் 1 அரைசதத்துடன் மொத்தம் 237 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 78 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
35 டி-20 போட்டிகளில் விளையாடி, துடுப்பாட்டத்தில் 1 அரைசதத்துடன் மொத்தம் 256 ஓட்டங்கள் எடுத்துள்ளார், அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 15 ஓட்டங்கள் எடுத்துள்ளார், பந்து வீச்சில் 8 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஜூலை 28ம் திகதி கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியே இலங்கை அணிக்காக இசுரு உதான விளையாடி கடைசி போட்டியாகும்.
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியிலிருந்து இலங்கை பிளேயிங் லெவனிலிருந்து இசுரு உதான ஓரங்கட்டப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you very much ❤️. Love you all. Stay safe. #goodbye #IZY17 pic.twitter.com/4dXt72bMn0
— Isuru Udana (@IAmIsuru17) July 31, 2021
வருங்கால சந்ததியினருக்கு வழி விட, என் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற வேண்டி நேரம் வந்துவிட்டது என உதான தெரிவித்துள்ளார்.