பிரித்தானியாவில் கொரோனா நெருக்கடியை தவிர்க்க மிக தாமதமாகிவிட்டது! விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கொரோனா நெருக்கடியை தவிர்க்க மிக தாமதமாகிவிட்டது என விஞ்ஞானிகளின் சுயாதீன குழுவான SAGE எச்சரித்துள்ளது.
SAGE குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகைக் காலத்தில் நிகழ்ந்த சமூகக் கலப்பு ஏற்கனவே அதிகரித்த தொற்றுநோய்களுக்கு வழிவகுத்துள்ளது, இது வரவிருக்கும் வாரங்களில் சமூக இடையூறுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என குழு எச்சரித்துள்ளது.
எனினும், குழு கொரோனா தாக்கத்தை குறைக்க பல வழிகளை பரிந்துரைத்துள்ளது.
அதாவது, குறைந்த பட்சம் பிப்ரவரி இறுதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு மக்களை வலியுறுத்தியது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் முடிந்தவரை ஆன்லைனில் கற்பிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
உட்புற பொது இடங்களில் FFP2 போன்ற உயர்தர முகக்கவசம் அணி கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், மற்றவர்களைச் சந்திப்பதற்கு முன் lateral flow சோதனையை மேற்கொள்ள அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் SAGE குழு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும், மேலும் உடனடியாக 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த கருத்தில் கொள்ள வேண்டும் என SAGE குழு வலியுறுத்தியுள்ளது.