மகாராணி மறைந்து சில நாட்கள்தான் ஆகியுள்ளது... அதற்குள் பிரித்தானிய ஆட்சியின் கீழிருக்கும் நாடு எடுத்துள்ள முடிவு!
பிரித்தானிய மகாராணியார் பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மேலும் 14 நாடுகளுக்கும் அவர்தான் மகாராணியார்.
மன்னராட்சியை தொடர்வதா அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதாக என பிரித்தானிய ஆட்சியின் கீழிருக்கும் நாடு ஒன்று திட்டமிடத் துவங்கியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார், பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மேலும் 14 நாடுகளுக்கும் அவர்தான் மகாராணியார் என்பது இப்போது பலருக்கும் தெரிந்த ஒரு விடயமாகிவிட்டது.
இந்நிலையில், மகாராணியார் மரணமடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மன்னராட்சியை தொடர்வதா அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதாக என பிரித்தானிய ஆட்சியின் கீழிருக்கும் நாடு ஒன்று திட்டமிடத் துவங்கிவிட்டது.
பிரித்தானியாவின் ஆட்சியின் கீழிருக்கும் 14 நாடுகளில் முதல் நாடாக, ஆண்டிகுவா மற்றும் பார்புடா என்னும் நாடு மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு வருவதாக, அந்நாட்டின் பிரதமரான Gaston Browne தெரிவித்துள்ளார்.
மக்களைப் பொருத்தவரை, இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
image - ndtv
நம்மை நாமே ஆளும் ஒரு நிலையை நாம் எட்டிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று கூறும் ஒருவர், ஆனால், நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான் கேள்வி என்கிறார்.
மற்றொருவரோ, இந்த நாட்டால் தன்னைத்தான் ஆள இயலாது, நம் பிரித்தானியாவுடன் இணைந்து இருப்பதுதான் நல்லது என்கிறார்.
சிலர், இது குறித்து முடிவெடுப்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்று கருதுகிறார்கள்.
ஆனால், பொதுவாகவே, மகாராணியாரின் மறைவு, மன்னராட்சி குறித்த கேள்விகளை பல நாடுகளில் எழுப்பியுள்ளதை மறுப்பதற்கில்லை.