பிரித்தானியாவில் பணி செய்ய இனி இது கட்டாயம்: உள்துறைச் செயலரின் திட்டத்துக்கு பிரதமர் ஆதரவு
பிரித்தானியாவில் புலம்பெயர்தல் முக்கிய பேசுபொருளாக ஆகிவிட்ட நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலர்.
பிரித்தானியாவில் பணி செய்ய இனி இது கட்டாயம்
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் திட்டத்தின்படி, பிரித்தானியாவில் பணி செய்ய இனி டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.
உள்துறைச் செயலரின் திட்டத்துக்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று அல்லது நாளை, அது குறித்து பிரதமர் முறைப்படி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, இனி பிரித்தானியாவில் பணி செய்ய விரும்புவோர், புதிதாக பணியில் இணைவோர், இந்த டிஜிட்டல் அடையாள அட்டையை காட்டவேண்டியிருக்கும்.
அதன்மூலம், அந்த நபருக்கு பிரித்தானியாவில் பணி செய்ய அனுமதி உள்ளதா என அதிகாரிகள் உடனடியாக சோதித்து அறிந்துகொள்வார்கள்.
இன்னொரு விடயம், தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித அடையாள அட்டையை போலியாகவும் உருவாக்க முடியும் என்பதாலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பணி வழங்குவோர், போலியாக தாங்கள் அடையாள அட்டையை சோதித்துவிட்டதாக ஏமாற்றவும்முடியும் என்றும் அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.
ஆகவே, டிஜிட்டல் அட்டையால் அந்த மோசடி வேலைகள் தவிர்க்கப்படும் என்பதால், இந்த டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறை பயன்பாட்டுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |