கண்களுக்கு தெரியாத சிற்பத்தை உருவாக்கி ஏலத்தில் விட்ட கலைஞர்! பின்பு அடித்த நம்பமுடியாத அதிர்ஷ்டம்
இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர், கண்களுக்கு தெரியாத சிற்பத்தை $18000க்கு விற்பனை செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் சல்வடோர் கராவ். இவர் மிகவும் திறமை வாய்ந்த சிற்ப கலைஞர் ஆவார்.
இந்த நிலையில் சல்வடோர் கராவ், நான் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாகியுள்ளார். கண்களுக்கே புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என சல்வடோர் கராவ் அழைக்கிறார்.
இந்த சிற்பமானது ஏலத்தில் விலைக்கு விடப்பட்டது. இதனை சிற்பமாக ஏற்றுகொண்ட ஒருவர் ArtNet என்ற ஏல மையத்திலிருந்து $18000 கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து சல்வடோர் கராவ் கூறுகையில், இது கற்பனையின் சக்தியை உங்களிடம் இருப்பதாக நம்பாதவர்கள் கூட செயல்படுத்தும்படி கேட்கும் ஒரு படைப்பாகும்.
நாம் இதுவரை பார்த்திராத கடவுளை சிற்பமாக படைப்பதில்லையா? அது போல தான் இதுவும்.
என் சிற்பம் குறைந்த விலைக்கே வாங்கப்படும் என கருதினேன்.
ஆனால் $18000க்கு விலை போயுள்ளது, இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.