குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்
இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர்.
குப்பையில் இருந்த ரூ.10.98 கோடி லொட்டரி டிக்கெட்
இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர், குலுக்கலுக்கு பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று லொட்டரி சீட்டை சரிபார்த்தபோது, அங்கிருந்த இயந்திரம் பணம் வழங்க முடியாது என்று காட்டியது.
மிகப்பெரிய தொகைகளை சிறிய கடைகளில் பெற முடியாது என அந்த இயந்திரம் காட்டியதை, தனக்கு பரிசு விழவில்லை என தவறாக நினைத்த அந்த பெண் லொட்டரி சீட்டை கடையிலே விட்டு வந்துவிட்டார்.

வீட்டிற்கு சென்ற பின்னர், அவர் வழக்கமாகத் தேர்வு செய்யும் எண்களே வெற்றி பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த எண்ணிற்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10.98 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
அவர் மீண்டும் கடைக்கு சென்ற போது, ஏற்கனேவே அந்த சீட்டை குப்பையில் வீசி அதனை குப்பை லொறி எடுத்து சென்று விட்டது.
ஆனால் அந்த குப்பை லொறியை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததால் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் பாதுகாப்பாக குப்பைகளை ஆராய்ந்து, ஒரு நாளுக்கு மேலாக தேடி, அந்த லொட்டரி சீட்டை கண்டறிந்துள்ளனர்.
ஆனால், அதிசயமாக அந்த லொட்டரி சீட் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது" என அதனை தேடிய SANB நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்டோ நிக்கோலா டோஸ்கானோ தெரிவித்துள்ளார்.
இதனை அந்த வெற்றி பெற்ற பெண்ணிடம் தெரிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். தேடியதற்கான செலவை SANB நிறுவனதிற்கு வழங்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |