ஒரே ஷாட்டில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசியை பெண்ணுக்கு செலுத்திய சுகாதார ஊழியர்! எப்படி.. என்ன ஆனது?
ஐரோப்பிய நாடான இத்தாலியில் சுகாதார ஊழியர் ஒருவர் கவனக்குறைவால் பெண் ஒருவருக்கு ஒரே ஷாட்டில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tuscany பகுதியில் உள்ள Noa மருத்துவமனையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Noa மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை 23 வயதுடைய பெண் கொரோனா தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தார்.
சுகாதார ஊழியர் கவனக்குறைவால் தடுப்பூசி குப்பியில் இருந்த மொத்த மருந்தையும் ஒரே ஊசியில் உரிந்தெடுத்து, அது மொத்தத்தையும் 23 வயதுடைய பெண்ணுக்கு செலுத்தியுள்ளார்.
அந்த குப்பியில் மொத்தம் 6 டோஸ் Pfizer கொரோனா தடுப்பூசி இருந்துள்ளது.
பின்னர் ஐந்து ஊசிகள் காலியாக இருப்பதை கண்ட சுகாதார ஊழியர் தான் தவறு செய்ததை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து, தடுப்பூசி போடப்பட்ட பெண் குறித்த மருத்துவனையிலேயே அனுமதிக்கப்பட்டு, சுமார் 24 மணிநேரம் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
பின் திங்கட்கிழமை அப்பெண் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவருக்கு தற்போது வரை எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது மனித கவனக்குறைவால் ஏற்பட்ட தவறே தவிர வேண்டுமென்றே செய்யப்பட்டதில்லை என மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் கூறினார்.