டெல்டா அச்சம்.. பிரத்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் புதிய கட்டுப்பாடு அமுல்! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் மீண்டும் கட்டாய தனிமைப்படுத்தலை இத்தாலி அமுல்படுத்துகிறது.
பிரித்தானியாவில் டெல்டா மாறுபாடு பரவுவதால் பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இத்தாலிய சுகாதார அமைச்சர் Speranza அறிவித்துள்ளார்.
இத்தாலிக்கு வருகை தரும் அனைத்து பிரித்தானியா பயணிகளும் 5 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இந்த விதி எப்போதிலிருந்து அமுலுக்கு வரும் என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.
அதுமட்டுமின்றி இந்தியா, வங்க தேசம் மற்றும் இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.