கிராமத்தில் வசிக்க முன் வருபவருக்கு ரூ.25 லட்சம்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன?
இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வசிக்க முன் வருவோருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்திற்கு படையெடுக்கும் மக்கள்
உலக அளவில் எந்த நாட்டில் எடுத்துக் கொண்டாலும் மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் நலிவடையும் கிராமப்புற விவசாய உற்பத்தியும், அசுரத்தனமான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தான்.
இதனால் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் தங்களது புதிய வாழ்வாதாரத்தை வேண்டி நகர் புறங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.
இவ்வாறு மக்கள் நகர் புறங்களுக்கு படையெடுப்பதன் மூலம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் வெகுவாக பாதிக்கிறது.
கிராமத்திற்கு வந்தால் ரூ.25 லட்சம்
இந்நிலையில் இத்தாலியில் உள்ள கிராம நிர்வாகம் ஒன்று சரிந்து வரும் கிராம பொருளாதாரத்தை சமாளிக்க புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இத்தாலியின் நகரங்களில் இருந்து கிராமத்தில் வசிக்க முன் வருவோருக்கு சுமார் 28 ஆயிரம் பவுண்டுகள்(ரூ.25 லட்சம்) வழங்கப்படும் என கலப்ரியா(calabria) கிராம நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்த சலுகையை பெற, 40 வயதிற்குள் இருக்க வேண்டும், கிராமத்தில் சிறு தொழில் நடத்தவோ, கைவிடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்கவோ அல்லது புதிய தொழில்கள் தொடங்கவோ முன்வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு சம்மதம் தெரிவித்து வருபவர்கள் கிராமத்திற்கு 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என்றும் கலப்ரியா கிராம நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |