தேவாலய ஓவியத்தில் இத்தாலி பிரதமர் மெலோனியின் உருவம்: உருவாகியுள்ள சர்ச்சை
இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதிலுள்ள ஓவியம் ஒன்றிலுள்ள தேவதூதனின் முகம், இத்தாலி பிரதமர் மெலோனியின் உருவத்தை ஒத்திருப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

தேவாலய ஓவியத்தில் இத்தாலி பிரதமர்
ரோம் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தேவாலயத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில், ஒரு தேவதூதனின் முகம், இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனியின் முகத்தைப் போலவே வரையப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், தேவாலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர் மெலோனியின் கட்சியுடன் அரசியல் ரீதியில் தொடர்புடையவரான புரூனோ (Bruno Valentinetti) என்னும் நபர்.
ஆகவே, அவர் வேண்டுமென்றே மெலோனியின் முகத்தை தேவதூதனின் முகமாக வரைந்தாரா என இத்தாலி ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், இத்தாலியின் கலாச்சாரத்துறை அமைச்சரான அலெசாண்ட்ரோ (Alessandro Giuli) இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மெலோனிக்கு புகழைக் கொண்டு வரும் நோக்கம் தனக்கு இல்லை என புரூனோ ஒரு பக்கம் மறுப்பு தெரிவிக்க, மெலோனியும், நான் நிச்சயம் தேவதூதனைப்போல இல்லை என சமூக ஊடகம் ஒன்றில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |