வீட்டிலேயே கஞ்சா சாகுபடி செய்வதை சட்டப்பூர்வமாக்கிய பிரபல ஐரோப்பிய நாடு!
உங்கள் சொந்த தேவைக்காக வீட்டிலேயே கஞ்சாவை வளர்ப்பது இத்தாலியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது சிறிய அளவிலான கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்க இத்தாலி தயாராக உள்ளது.
அதற்கான ஒரு சீர்திருத்தம் புதன்கிழமை இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் நீதிக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. இந்த சீர்திருத்தத்தின் கீழ் வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கஞ்சா கடத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதற்கு அதிகபட்ச தண்டனையாக 6 முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படுகிறது.
இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ மேகியால் (Riccardo Magi) முன்வைக்கப்பட்ட இந்த சீர்திருத்தம் காரணமாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உள்நாட்டு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கிய ஐரோப்பாவின் முதல் நாடுகளில் ஒன்றாக இத்தாலி மாறியுள்ளது.
ஏற்கெனவே ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் வீட்டில் 5 கஞ்சா செடிகள் செடிகள் வரை வளர்க்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2019-இல் இத்தாலியின் உச்ச நீதிமன்றத்தில் சிறிய அளவிலான கஞ்சாவை வளர்ப்பது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீர்திருத்தம் அமுலுக்கு வருகிறது.
இதுவே, பிரித்தானியாவில் கஞ்சாவை வீட்டு சாகுபடி செய்வது, போதைப்பொருளை வைத்திருப்பது, விற்பது அல்லது விநியோகிப்பது ஆகியவை சட்டவிரோதமானது. இந்த குற்றத்திற்கு தண்டனையாக 2,500 பவுண்டுகள் வரை அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை விதிக்கப்படுகிறது.