பிரான்ஸை தொடர்ந்து பிரபல ஐரோப்பிய நாட்டில் அமுலுக்கு வரும் புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்
கொரோனா தொற்று அதிரித்து வரும் நிலையில் பிரான்ஸை போலலே பிரபல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் இன்று முதல் பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு நுழைவதற்காக ஹெல்த் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியும் இதே விதிகளை அமுல்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு விமானங்கள், இரவு கிளப்புகள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு நுழைவதற்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம், தொற்று இல்லை அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரங்களை காட்டும் ‘பச்சை சான்றிதழ்’ காண்பிப்பதை கட்டாயமாக்க இத்தாலி அரசாங்கம் பரிசீலித்து வருகிறதாம்.
வியாழக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூரோ 2020 இறுதிப் போட்டியில் இத்தாலி இங்கிலாந்தை வீழ்த்திய ஜூலை 11 முதல் ரோமில் வழக்குகள் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக அன்சா செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யூரோ இறுதிப் போட்டி அன்று 122 தொற்றுகள் உறுதியான நிலையில் நேற்று 557 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.