சொந்த நாட்டு மக்களுக்கே இனி இது கட்டாயம்! பிரபல ஐரோப்பிய நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலியில் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய விதி குறித்து அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, இத்தாலியில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கொரோனா ‘கிரீன் பாஸ்’ கட்டாயமாக்கப்பட உள்ளதாக அமைச்சர் இன்று கூறினார்.
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கொரோனா ‘கிரீன் பாஸ்’ கட்டாயமாக்கும் முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க மற்றும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தவும் இத்தாலி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் போட்டது, சோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதியானது அல்லது சமீபத்தில் வைரஸிலிருந்து மீண்டதற்கான ஆதாரத்தை காட்டும் ஒரு டிஜிட்டல் அல்லது காகித சான்றிதழே ‘கோவிட் பாஸ்’ ஆகும்.
ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே எளிதாக பயணிக்க ‘கிரீன் பாஸ்’ உருவாக்கப்பட்டது.
ஆனால், நாட்டில் உள்ள உணவகங்களில் அருங்காட்சியகங்கள், ஜிம்கள் போன்ற இடங்களில் மக்கள் நுழைவதற்கு ‘கிரீன் பாஸை’ கட்டாயமாக்கிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.