பிரபல ஐரோப்பிய நாட்டில் அமுலுக்கு வரும் புதிய விதி! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உணவகங்கள் மற்றும் சினிமாக்கள் உட்பட உட்புற இடங்களில் நுழைய மக்கள் டிஜிட்டல் கரீன் சான்றிதழைக் காட்ட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6 முதல் இந்த விதி அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 வயதிற்கு மேற்பட்ட எவரும் உட்புற இடங்களில் நுழைய குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ், கொரோனா தொற்று இல்லை என்ற சோதனை முடிவு அல்லது சமீபத்தில் வைரஸிலிருந்து மீண்டு சான்றிதழை காட்ட வேண்டும்.
இத்தாலியில் வணிகங்களைத் திறந்து வைக்க ஐரோப்பிய ஒன்றிய சான்றிதழ் திட்டத்தின் பயன்பாட்டை விரிவாக்குவது அவசியம் என இத்தாலி பிரதமர் Mario Draghi கூறினார்.
இருப்பினும், ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பின்னர், உள்நாட்டு பொது போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இப்போது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், ஆனால் வியாழக்கிழமை 5,000-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.