கொரோனா தடுப்பூசி பெறாவிட்டால் வேலை கிடையாது... கெடு விதித்துள்ள பிரித்தானிய சுகாதாரச் செயலர்
இங்கிலாந்தில் NHS ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி பெறாவிட்டால் அவர்கள் பணிக்கு வரமுடியாது என்று கூறும் சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்று கைவசம் இருப்பதாக சுகாதாரச் செயலர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் NHS ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் திட்டம் ஒன்று குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பிரித்தானிய சுகாதாரச் செயலர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
77,000 NHS ஊழியர்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி பெறவில்லை என்று கூறியுள்ள ஜாவித், அவர்கள் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்குள் தடுப்பூசி பெறாவிட்டால், வேலையை இழக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தடுப்பூசி கட்டாயம் என்ற விதி கொண்டுவரப்பட்டால், NHS ஊழியர்கள் தட்டுப்பாடு உருவாகலாம் என்ற அச்சமும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும், பிப்ரவரி 4 முதல், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.