எனக்கும் கொலை மிரட்டல் வந்தது...! நடந்ததை வெளிப்படுத்திய பிரித்தானியா நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப்
தனக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரித்தானியா நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்ட சர் டேவிட் அமெஸுக்கு இன்று பிற்பகல் பிரித்தானியா பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரித்தானியா நீதித்துறை செயலாளர் டொமினிச் ராப், நான் முதலில் எம்.பி. ஆனபோது சர் டேவிட் அமெஸ் எனக்கு கொடுத்த நட்பை நான் இன்னும் உணர்கிறேன்.
சில வாரங்களுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் விலங்கு நலன் குறித்து சர் டேவிட் உடன் பேசினேன்.
தனது தொகுதி மக்களிடம் உண்மையாக இருக்கும் ஒரு சிறந்த அரசியல்வாதி அவர் என மறைந்த சர் டேவிட் அமெஸை, டொமினிக் ராப் புகழ்ந்தார்.
அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் தனக்கும் கொலை மற்றும் தாக்குதல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக டொமினிக் ராப் கூறினார்.
தொகுதி மக்களுடனான கூட்டங்கள் தொடர்பான பதட்டங்கள் போன்ற நடைமுறை விஷயங்களைப் பற்றி பேச பொலிசார் என்னை தொடர்பு கொண்டிருந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு கொலை மற்றும் தாக்குதல் என மூன்று மிரட்டல்கள் விடுக்கப்பட்டன, எனவே நிச்சயமாக நான் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன்.
இறுதியில் இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என்று எனக்கு தோன்றும். தொகுதிவாதிகளுடனான எனது சந்திப்புகளை நிறுத்துவதின் மூலம் பயங்கரவாதிகள் வெற்றிபெறுவதை அனுமதிக்க நான் விரும்பவில்லை.
நமது ஜனநாயகம் மீத தாக்குதல் நடத்த நினைப்பவர்களை நாம் அனுமதிக்கக்கூடாது.
நம்மை மிரட்ட நினைப்பவர்கள், நாம் தொகுதி மக்களுடன் பேச மற்றும் சமுதாயத்திற்கு சேவை செய்வதை தடுக்க நினைப்பவர்கள் வெற்றி பெற நாம் ஒருபோதும் அனுமதிக்ககூடாது என டொமினிக் ராப் கூறினார்.