நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு: காரணம் இதுதான்
நியூசிலாந்தின் பிரதமராக மேலும் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஜெசிந்தா ஆர்டெர்ன், தாம் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
பின்னணியில் அரசியல் காரணங்கள்
இந்த நிலையில், அவரது பதவி விலகல் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே கூறுகின்றனர். இடதுசாரி அரசியல்வாதியான ஜெசிந்தா ஆர்டெர்ன் உலகின் இளம் வயது பெண் பிரதமராக 2017ல் பொறுப்பேற்றார்.
@getty
அத்துடன் உலக அளவில் கவனத்தை ஈர்த்த அவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அமைத்துக் கொண்டதுடன், இளவரசர் வில்லியம் உட்பட பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
மட்டுமின்றி, தீவிரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட சூழலில் அவரின் அணுகுமுறை உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டாக நியூசிலாந்தில் அவரது புகழ் சரிவடைந்து காணப்படுவதுடன் ஆளும் தொழில் கட்சியில் அவர் சுமையாகவும் பார்க்கப்பட்டார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது, கடுமையான கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்களில் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை ஜெசிந்தாவை பதவி வில தூண்டியதாகவே கூறப்படுகிறது.
@AFP
கடந்த டிசம்பரில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் தொழில் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு 33% என தெரிய வந்துள்ள நிலையில், நாட்டின் முக்கிய மைய-வலதுசாரி கட்சியான National தங்கள் செல்வாக்கை அதிகரித்துள்ளதுடன், கருத்துக்கணிப்பில் 38% மக்கள் ஆதரவை பெற்றனர்.
தொழில் கட்சிக்கு இனி வாய்ப்பு இல்லை
எதிர்வரும் அக்டோபர் மாதம் தேர்தலை எதிகொள்ளவிருக்கும் நியூசிலாந்தில், தொழில் கட்சிக்கு இனி வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஜெசிந்தா தமது பிரதமர் பதவியை துறப்பார் என இதுவரை எவரும் கணிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2017 ஜூலை மாதம் அவர் பிரதமராக பொறுப்பேற்கும் வரையில். நியூசிலாந்துக்கு வெளியே அவரை எவருக்கும் தெரியாது. நியூசிலாந்து மக்களில் பெரும்பாலானோருக்கும் ஜெசிந்தா என்ற அரசியல்வாதியை அறிமுகம் இல்லை.
@AP
National கட்சியை தேர்தலில் எதிகொள்ளும் போது தொழில் கட்சியினரின் மக்கள் செல்வாக்கு வெறும் 23% என இருந்தது. இதனையடுத்து கடினமான முடிவை எடுத்த Andrew Little, தமது பதவியை துறந்ததுடன், அதுவரை சில பேர்களுக்கு மட்டும் அறிமுகமான ஜெசிந்தாவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தார்.
7 வாரங்களுக்கு பிறகு தொழில் கட்சி செப்டம்பர் மாத தேர்தலில் வெற்றிபெற்றதுடன் 37 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன் உலகின் இளவயது பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.