வெளிநாடொன்றில் இளம்பெண்ணை சீரழித்த இந்தியருக்கு சிறை
சிங்கப்பூரில், இளம்பெண் ஒருவரை வன்புணர்ந்த இந்தியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழிதவறிச் சென்ற இளம்பெண்
தன் காதலனுடன் மொபைலில் சண்டை போட்டுக்கொண்டே தவறான பேருந்து நிலையத்தைச் சென்றடைந்த இளம்பெண் ஒருவரை, தூய்மைப் பணியாளர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார்.
அவர் பெயர் சின்னையா (26), அவர் ஒரு இந்தியர்.
பின் அந்தப் பெண்ணைத் தாக்கி, மரங்கள் அடர்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்ற சின்னையா, மேலும் கடுமையாகத் தாக்கி, அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்து, அவளை அசையவிடாமல் செய்து, அவளை வன்புணர்ந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து சின்னையா ஓடிவிட, அந்தப் பெண் தன் காதலனை மொபைலில் அழைத்து அழுதுகொண்டே விடயத்தைக் கூற, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை காணவந்த அவரது காதலருக்கு, அவரை அடையாளமே தெரியவில்லையாம். அந்த அளவுக்கு சின்னையா அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிறைத்தண்டனை
மறுநாள் சின்னையா பொலிசில் சிக்கிய நிலையில், அவரது மன நிலை குறித்து முடிவு செய்ய நீண்ட காலமாகியுள்ளது. இந்நிலையில், தற்போது சின்னையா வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Public domain
அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் எதிர்காலம் கருதி, அவரது பெயர் முதலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |