மிக மோசமான நிலை... சிறையில் இருந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஈரானிய நோபல் பரிசு பெற்றவர்
சிறையில் உள்ள ஈரானிய மனித உரிமை சட்டத்தரணி நர்கெஸ் மொஹம்மதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவரது அறக்கட்டளையும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை மோசமடைந்து
தனது சொந்த மருத்துவர்களால் சிகிச்சை பெறுவதற்காக, அவர் தெஹ்ரானுக்கு மாற்றப்படுவதை ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் எதிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
50-களின் முற்பகுதியில் உள்ளவரும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவருமான மொஹம்மதி, இதயப் பிரச்சினை மற்றும் மயக்கம் காரணமாக, வெள்ளிக்கிழமையன்று ஈரானின் வடமேற்கில் உள்ள ஜஞ்சான் நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.
டிசம்பரில் கைது செய்யப்பட்டபோது அவர் தாக்கப்பட்டதன் காரணமாகவும் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜன்ஜானில் உள்ள மருத்துவக் குழுவினர் எந்தவொரு சிகிச்சையையும் மேற்கொள்வதற்கு முன்பு அவரது மருத்துவப் பதிவுகளைக் கோரியுள்ளதாகவும், அதே நேரத்தில் அவரை தெஹ்ரானுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் அவரது அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஆனால், பாரிஸில் வசிக்கும் அவரது கணவரான தாகி ரஹ்மானி, ஆஞ்சியோகிராபி அல்லது உரிய சிகிச்சைக்காக இந்த இடமாற்றத்தை உளவுத்துறை அமைச்சகம் எதிர்த்ததாகக் கூறினார்.
ஏற்கனவே 13 ஆண்டுகள்
இந்த நிலையில், நார்வே நோபல் குழு அறிக்கை ஒன்றில், மொஹம்மதியின் உயிர் ஈரான் நிர்வாகத்தின் கைகளில் இருப்பதால், அவரை உடனடியாக அவரது மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஈரான் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 12 அன்று கைது செய்யப்படுவதற்கு முன்பு, மொஹம்மதி, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக கூட்டுச் சதி செய்த மற்றும் ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கனவே 13 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
ஆனால், மருத்துவக் கவலைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அவர் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவரது சட்டக் குழு, தலைமை சட்டத்தரணி அலுவலகத்திடம் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசி வருவதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |