தூக்கிலிடப்படும் அச்சத்தில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள்: இஸ்ரேலின் புதிய சட்டத்தால் பீதி
பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனையை இயல்பான தண்டனையாக ஆக்கும் புதிய சட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள தங்கள் உறவினர்கள் விசாரணை இன்றி தூக்கிலிடப்படலாம் என பாலஸ்தீனியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை மீறுவதாக
புதிய இந்தச் சட்டம் இஸ்ரேலிய குடிமக்களுக்கும் பொருந்தும், ஆனால் கொடிய தாக்குதல் என்பது யூத மக்களுக்கு பொருந்தாது என வரையறுப்பதன் மூலம், அது யூத இஸ்ரேலியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது மிகவும் சாத்தியமற்றதாக இருக்கும் என்றே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இதனிடையே, திங்கள்கிழமை பிற்பகல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், சர்வதேச உடன்படிக்கையை மீறும் கூறுகளைக் கொண்டிருப்பதால், மனித உரிமை அமைப்புகள் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து இஸ்ரேலின் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் இந்தச் சட்டம் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் செவ்வாயன்று தெரிவித்தார். மேலும், மரண தண்டனையைத் தூக்கிலிடுவதையே சட்டம் குறிப்பாகக் கட்டாயமாக்குகிறது; இஸ்ரேலிய மருத்துவர்கள் மரண ஊசிகளைச் செலுத்த மறுத்துவிடுவார்கள் என்ற கவலைகளின் காரணமாகவே இந்த விதிமுறை சேர்க்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக, தண்டனை விதிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் கருணை மனுவுக்கான உரிமைகளும் வழங்கப்படவில்லை.
மட்டுமின்றி, மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனையைத் தெரிவு செய்யும் வாய்ப்பை, நீதிபதிகளுக்குச் சட்டம் வழங்குகிறது; ஆனால், இது குறிப்பிடப்படாத சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே சாத்தியமாகும்.

இந்த நிலையில், மேற்குக் கரை நகரமான ரமல்லாவில், பாலஸ்தீனக் கைதிகளின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில் மரண தண்டனைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினர்.
வன்முறைகள்
இதனிடையே, இஸ்ரேல் அங்கீகரித்துள்ள 1949-ஆம் ஆண்டின் நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மன்னிப்புக் கோரும் உரிமை பறிக்கப்படக்கூடாது என்றும், தண்டனைக்கும் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கும் இடையில் குறைந்தபட்சம் ஆறு மாத கால இடைவெளி இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகக் இஸ்ரேலியர்கள் நடத்தும் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் குறித்தும் ஏற்கனவே தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் மீது, இந்தச் சட்ட மசோதா சர்வதேச அளவிலான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் தண்டனைக்காகக் காத்திருக்கும் 45 முதல் 47 பாலஸ்தீனியக் கைதிகள், புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ளக்கூடும் என்று பாலஸ்தீனிய அதிகார சபையின் கைதிகள் நலத்துறை அமைச்சர் மதிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |