வீடுகளுக்கு திரும்ப வேண்டாம்! சுனாமி எச்சரிக்கையை கைவிட்ட ஜப்பான்
ஜப்பானில் கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று 7.5 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கடற்பகுதியில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜப்பான் அரசு உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை கைவிட்டுள்ளது. ஆனாலும், பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AP
வீடுகளுக்கு திரும்ப வேண்டாம்
கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச்சில் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 18,500 பேர் பலியாகினர் அல்லது மயமானதாக கூறப்பட்டது.
Reuters
அதேபோல் 2022ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, கிழக்கு பகுதியில் பாரிய பகுதிகளை உலுக்கியது. இதில் மூவர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |