ஹோர்முஸ் மூடப்பட்ட பிறகு முதல் முறையாக..ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் ஆசிய நாடு
ஜப்பான் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட பின் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது.
தள்ளாடும் உலகப் பொருளாதாரம்
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்தது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதன் காரணமாக உலகப் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இதனால், பல நாடுகளின் அரசாங்கங்கள் மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதற்கு தற்போது தீவிரமாக முயன்று வருகின்றன; அவற்றில் ஆசிய நாடான ஜப்பானும் ஒன்று.
உக்ரைன் மீதான படையெடுப்பதைத் தொடர்ந்து ஜப்பான் ரஷ்யா எண்ணெய் வாங்குவதை பெரும்பாலும் நிறுத்தியிருந்தது.
எனினும், அவ்வப்போது விநியோகத்தை பெற்று வந்தது; சமீபத்தில் கடந்த கோடையில் பெற்றது.
சகாலின்-2 திட்டம் வழியாக
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட பிறகு முதல் முறையாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை ஜப்பான் வாங்குகிறது. ஜப்பானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள சகாலின்-2 திட்டம் வழியாக இந்த சரக்கைப் பெற, ஜப்பானிய சுத்திகரிப்பு நிறுவனமான டாயோ ஆயில் திட்டமிட்டுள்ளதாக Mainichi செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
Gazprom (ரஷ்யா) இந்தத் திட்டத்தின் கட்டுப்பாட்டுப் பங்குதாரராக உள்ளது. அதே நேரத்தில், ஜப்பானிய வர்த்தக நிறுவனங்களான மிட்சுய் மற்றும் மிட்சுபிஷி ஆகியவையும் சிறுபான்மை பங்குகளைத் தக்கவைத்துள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |