நிலநடுக்கத்தால் நகர்ந்த ஜப்பானின் நிலப்பரப்பு : மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்
கடந்த முதலாம் திகதியன்று ஜப்பான் கடலில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனாமி எச்சரிக்கை
இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களின் கடற்கரையில் மாலை 4 மணிக்குப் பிறகு நிலநடுக்கங்கள் பதிவாகியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
富山市 萩浦橋 津波到達中 pic.twitter.com/5TJkH4E1Mx
— ジョイマリン富山 (@hioooomn) January 1, 2024
ஆகவே மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலி எண்ணிக்கை
தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருக்கிறது.
பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்து இருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டு அதிநவீன ஜி.பி.எஸ். ஸ்டேஷன்கள் தகவல் சேகரித்துள்ளன.
இந்நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |