ஜப்பானை உலுக்கிய சம்பவம் : ஒரே நாளில் 150 நிலநடுக்கம் - வெளியான காரணம்
ஜனவரி முதலாம் திகதியன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் மிகவும் அதிகமாக நில அதிர்வு ஏற்படும் நாடுகளில் ஜப்பான் நாடு ஒன்றாகும். முழு நாடும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவ்வாறு நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன நடந்தது?
ஜனவரி 1ஆம் திகதி மாலை 4 மணியளவில் ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக நாட்டின் கடலோரப் பகுதிகள் அனைத்திற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின் ஜனவரி 2 ஆம் திகதி சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இதில் 200 கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் மற்றும் நீர் இல்லாமல் இருந்தனர் மற்றும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அடுத்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு முன் எச்சரிகையாக இருக்க வேண்டும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏன் ஏற்பட்டது?
2018ஆம் ஆண்டிலிருந்து நிலநடுக்கமானது அதிகரித்துக் கொண்டே இருகிறது. அதாவது, நவம்பர் 2020ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2023ஆம் ஆண்டு வரை நில அதிர்வு திரளில் நோட்டோ தீபகற்பத்தில் 14,000-க்கும் மேற்பட்ட லேசான பூகம்பங்கள், 1 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் ஏற்பட்டுள்ளன.
நோட்டோ தீபகற்பத்தில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் நோட்டோ-ஹான்டோ பூகம்பம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டு 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
ஜப்பானில் நிலநடுக்கம் எவ்வளவு ஆபத்தானது?
ஜப்பானில், கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
2011ஆம் ஆண்டின் கிரேட் ஈஸ்ட் ஜப்பான் பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியும் சுமார் 20,000 பேரை தாக்கியது.
2011-ல் 1,20,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இதனால் டோக்கியோ எலக்ட்ரிக் ஃபுகுஷிமா ஆலையில் ஜப்பானின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது.
1995ஆம் ஆண்டில், கோபி நிலநடுக்கத்தில் 6,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் 2016-ல் குமாமோட்டோ நிலநடுக்கம் 200-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியது.
1923-ல் டோக்கியோவைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,00,000 தாண்டியமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |