ஐரோப்பாவிற்கே முன்மாதிரியாக திகழும் ஜப்பான்! எந்த விடயத்தில் தெரியுமா?
எரிசக்தி சேமிப்பில் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் விளைவாக, எரிசக்தி பெறுவதில் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆகத்து முதல் மார்ச் வரை எரிவாயு பயன்பாட்டை 15 சதவிதம் குறைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி அமைச்சர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தனர். ஆனால் ஜப்பானோ ஒரு தசாப்தத்திற்கு முன்பே இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது.
அந்நாட்டில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டதால் வீடுகள், வணிக அங்காடிகளில் விளக்குகளை மங்கச்செய்தல், படிக்கட்டுகளை பயன்படுத்துதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, ஜப்பானில் எரிசக்தி சேமிப்பு என்பது 2011ஆம் ஆண்டில் நிலநடுக்கம், சுனாமியை எதிர்கொண்டபோது தேசிய திட்டமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து வணிக அங்காடிகள், மால்களில் நகரும் படிக்கட்டுகள் நிறுத்தப்பட்டன. சாதாரண படிக்கட்டுகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. சூதாட்ட நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட ஒளிரும் விளக்குகள், சத்தத்தை எழுப்பும் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
PC: REUTERS/Issei Kato
இதுகுறித்து ஜப்பானின் எரிசக்தி பொருளாதாரக் கழகத்தைச் சேர்ந்த கொய்ச்சிரோ தனகா கூறுகையில், 'அந்த சமயத்தில் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஜப்பானியர்களின் அணுகுமுறையாக மாறியது. இல்லையெனில் ஒரு பேரழிவு ஏற்படும் என நினைத்தோம்.
கோவிட்-19 காலத்திலும் தீவிர அழுத்தம் ஏற்பட்டதால், ஜப்பானியர்கள் பொது இடங்களில் முகமூடி அணிவதை தங்கள் பொறுப்பு என நினைத்து கடைபிடித்ததும் நாட்டின் நன்மைக்கான ஒரு பங்காகும்' என தெரிவித்துள்ளார்.
FILE PHOTO