அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டோம்: ஜப்பான் திட்டவட்டம்
ஐ.நா அணு ஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்துகொள்ள மாட்டோம் என ஜப்பான் அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடை ஒப்பந்தம்
2021ஆம் ஆண்டு அணு ஆயுத தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. 2017யில் இதற்கான ஒப்புதல் கிடைத்தது.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்க அணுகுண்டு வீசியதுபோல் மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக ஐ.நா இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த மாநாடு இன்று தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் என கூறியுள்ளது.
யோஷிமசா ஹயாஷி
ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி இத்தொடர்பாக கூறுகையில், "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுப்பதற்கு முக்கிமான காரணமாகும்.
கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" என கூறியுள்ளார்.
மேலும், அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக்கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜப்பான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |