மலிவு விலை உணவுகளை நாடும் சம்பளம் வாங்கும் மக்கள்... விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் ஆசிய நாடு
ஜப்பானில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக மாத சம்பளம் வாங்குவோர்களும் தற்போது மலிவு விலை உணவுகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது பெரிய பொருளாதார நாடு
உக்ரைன் போர், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவையால் ஜப்பான் அரசாங்கம் விலைவாசி உயர்வுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான குடும்பங்கள் அதன் தாக்கத்தை உணரத் தொடங்கியுள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், விலைவாசி உயர்வால் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 30,000 உணவு பண்டங்களுக்கான விலை அதிகரித்துள்ளது. இதனால் அதிக சம்பளம் வாங்குவோரின் மதிய உணவிலும் அதன் தாக்கம் காணப்படுவதாக கூறுகின்றனர்.
பணத்தைச் சேமிப்பதற்காக
கடந்த ஆண்டு டோக்கியோ நகரத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று முன்னெடுத்த ஆய்வில், 20 வயது கடந்த 50 வயது வரையான சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பலர் தெரிவிக்கையில், உணவுக்கு மட்டும் நாளுக்கு 2.60 பவுண்டுகளுக்கும் குறைவாக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Credit: pinterest
இன்னொரு ஆய்வில் சுமார் 40 சதவிகித ஆண் மற்றும் பெண் அலுவலக ஊழியர்கள் தங்கள் மதிய உணவு செலவுகளை கட்டுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஏறக்குறைய 70 சதவிகிதம் பேர் பணத்தைச் சேமிப்பதற்காக தங்களுக்குப் பிடித்த உணவுகளைத் தவிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
டோக்கியோ போன்ற பல்லாயிரக்கணக்கான உணவகங்கள் உள்ள நகரில் தற்போது மக்கள் நாளுக்கு 2.60 பவுண்டுகள் தொகையில் உணவு தேவைகளை முடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |