தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் 2 வீரர்கள் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் நடந்த முகாமின் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார்.
சுந்தர், புதன்கிழமை ஒரு நாள் அணி வீரர்களுடன் கேப் டவுனுக்குச் பயணித்து, ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கும் ODI தொடருக்கு முன்னதாக மற்ற இந்திய அணியினருடன் இணைய இருந்தார்.
இந்நிலையில், சுந்தருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவை இந்திய தேர்வுக் குழு நியமித்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஏற்பட்ட தொடை காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வரும் முகமது சிராஜுக்கு பேக்-அப்பாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியை, தேர்வுக்குழு ODI அணியில் சேர்த்துள்ளது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
NEWS - Jayant Yadav & Navdeep Saini added to ODI squad for series against South Africa.
— BCCI (@BCCI) January 12, 2022
More details here - https://t.co/NerGGcODWQ #SAvIND pic.twitter.com/d14T9j3PgJ
இந்திய ஒருநாள் அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.