4 பெண்கள், 3 பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான பரிதாபம்
பாகிஸ்தானில் ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கவிழ்ந்த ஜீப்
பாகிஸ்தானின் மாகாணம் ஷாங்லா மாவட்டத்தில் ஜீப் ஒன்றில் குடும்பத்தினர் பயணம் செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 பிள்ளைகள் மற்றும் ஆண் ஓட்டுநர் என எட்டு பேர் தங்கள் உறவினரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மோசமான சாலை
இதுகுறித்து அறிந்த மீட்புக்குழு, தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட அறிக்கையின்படி, மோசமான சாலையின் நிலைமையே விபத்திற்கு காரணம் என்றும் காவல்துறை அதிகாரி இம்ரான் கான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |