நண்பனை இழந்து வாடுகிறோம்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உருக்கமுடன் வெளியிட்ட தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உருக்கமுடன் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், கடந்த ஜனவரி மாதம் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் குடியேறினார். அப்போது அவர் தன்னுடைய செல்லபிராணி நாய்களையும் உடன் அழைத்து வந்தார்.
இதில் 2008-ம் ஆண்டு ஜேர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த சாம்ப் என்ற நாயையும், 2018-ஆம் ஆண்டு அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயையும் தத்தெடுத்தார்.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய்களில் ஒன்றான சாம்ப் இன்று இறந்தது.
இதனால் சாம்ப் மறைவு குறித்து அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 13 ஆண்டு காலம் எங்கள் குடும்பத்தின் உற்ற நண்பனாக விளங்கிய சாம்பை இழந்து வாடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.