அகதி குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கையில் இறங்கிய ஜோ பைடன் மனைவி!
பெற்றோருடன் அகதி குழந்தைகளை சேர்க்க அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை எடுத்துள்ளா
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை, குழந்தைகளை மீண்டும் ஒன்றிணைக்க அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் தனது கணவரின் முயற்சிகளில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, ‘பிரிக்கப்பட்ட குடும்பங்களையும், குழந்தைகளையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு பணிக்குழுவை தொடங்குவது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்க ஆர்வமாக உள்ளார் என்றார்.
பெற்றோருடன் மீண்டும் சேர்க்க வேண்டிய 2,700-க் கும் மேற்பட்ட குழந்தைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.