ஜான்சன் அண்ட் ஜான்சன் 1-டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்! 100 மில்லியன் டோஸ்களை வாங்க ஒப்பந்தம்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஒற்றை-டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால தடுப்பூசியாக பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனமான FDA பல கட்ட ஆய்வுக்குப் பிறகு ஜான்சன் அண்ட் ஜான்சன் Single-Dose தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கு பயன்படுத்த சனிக்கிழமை அங்கீகாரம் அளித்துள்ளது.
இது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள முன்றாவது கொரோனா தடுப்பூசியாகும். ஏற்கெனவே ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.
தற்போது வரை அமெரிக்காவில் 65 மில்லியன் மக்களுக்கு கொரோன தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த வாரத்திலிருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியையும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் 20 மில்லியன் டோஸை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் ஜூன் மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ்களை பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.