கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி

corona united states
By Balamanuvelan Oct 28, 2021 06:10 AM GMT
Report

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது பொலிசாரால் கைது செய்யப்பட்ட இந்தியரை நீதிபதி ஒருவர் விடுவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் மூன்று மாதங்களாக தங்கியிருந்த ஒருவரை அமெரிக்க பொலிசார் அத்துமீறி பொது கட்டிடம் ஒன்றிற்குள் நுழைந்ததாக கைது செய்தனர்.

அவரது பெயர் ஆதித்யா சிங் (36). தாடி மீசையுடன் வீடற்ற ஒருவர் போல காணப்பட்ட அந்த நபர் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருக்கிறார். Oklahoma மாகாண பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கல்வி ஒன்றை பயின்ற அவர், கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு, விருந்தோம்பல் துறைப் பணியாளராக பணியாற்றிய அவர், தனது நண்பர் ஒருவரின் தந்தையை கவனித்துக்கொள்ளும் வேலையைப் பார்த்திருக்கிறார்.

தனது விசாக்காலம் முடிவடையும் நாள் நெருங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார் அவர்.

2020ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஏறி சிக்காகோ விமான நிலையம் வந்திருக்கிறார் அவர். ஆனால், இந்தியாவுக்குச் சென்றால் கொரோனா தொற்றிவிடுமோ என பயந்து விமான நிலையத்திலே தங்கிவிட்டிருக்கிறார்.


யாரோ ஒருவர் தவறவிட்ட அடையாள அட்டையை எடுத்து வைத்துக்கொண்டு, விமான நிலையத்திலேயே மறைவான ஒரு இடத்தில் மூன்று மாதங்களாக வாழ்ந்துவந்திருக்கிறார் ஆதித்யா.

முன்பின் தெரியாதவர்கள் வாங்கிக்கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்துவந்த ஆதித்யாவை ஜனவரி மாதம் பொலிசார் கைது செய்தார்கள்.

அவர் கைது செய்யப்பட்ட விடயம் தெரியவந்தபோது, ஒரு வெற்றிகரமான விருந்தோம்பல் துறைப் பணியாளராக வலம் வந்த ஆதித்யா கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி | Judge Acquits Man Lived Chicago Airport 3 Months

அவர் ஒரு அறைக்குள் வந்தாரென்றால் அந்த அறையே பிரகாசமாகிவிடும், அப்படி ஒரு முன்மாதிரியான விருந்தோம்பல் துறைப் பணியாளராக இருந்தவர் ஆதித்யா என்கிறார் அவருடன் பணியாற்றிய Katherine Ruck என்பவர்.

இந்நிலையில், தற்போது ஆதித்யாவை நீதிபதி ஒருவர் அத்து மீறியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்.

ஆதித்யா கைது செய்யப்பட்டபின், சிக்காகோ விமான நிலைய பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், ஆதித்யா விமான நிலைய விதிகளை மீறவில்லை என்ற முடிவுக்கு வந்தது.

ஆதித்யா அத்துமீறி நுழையவோ, பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழையவோ இல்லை. அவர் மற்ற பல்லாயிரக்கணக்கான பயணிகளைப் போலவே விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்துக்குள் வந்துள்ளார், அவ்வளவுதான் என்று கூறியுள்ள விமானத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர், அவர் எதற்காக விமான நிலையத்திலே தங்கிவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், கைது செய்யப்படும் வரை ஒரு சாதாரண பயணியைப் போல, ஒரு விமான நிலைய ஊழியரைப் போல இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.  

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி | Judge Acquits Man Lived Chicago Airport 3 Months

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி | Judge Acquits Man Lived Chicago Airport 3 Months

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவித்த நீதிபதி | Judge Acquits Man Lived Chicago Airport 3 Months

10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US