நண்பர் வீட்டில் இறந்துகிடந்த 30 வயது கொரிய பாடகி! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தென்கொரிய பாடகி பார்க் போ ரம் தனது நண்பர் வீட்டில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Park Bo Ram
தென்கொரியாவின் Chuncheon நகரைச் சேர்ந்த பாப் பாடகி பார்க் போ ரம் (Park Bo Ram). 30 வயதான இவர் K-pop உலகில் மிகவும் பிரபலமாக வலம் வந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அன்று சியோலில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பார்க் போ ரம் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் இரவு 11.17 மணியளவில், அதாவது அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பின் அவர் உயிரிழந்தார். பொலிஸார் பார்க் போ ரம் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
போரின் நடுவில் இருக்கிறோம், சவால்களுக்கு தயாராகி வருகிறோம் - ஈரான் எச்சரிக்கைக்கு நெதன்யாகுவின் பதில்
ரசிகர்கள் அதிர்ச்சி
இதற்கிடையில் செய்தி நிறுவனமான AllKPop கூற்றுப்படி, பாடகி தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக Namyangju காவல் நிலையம் ஒரு அறிக்கையை பதிவு செய்தது.
அத்துடன் இரவு 9.55 மணிக்கு கழிவறைக்கு சென்ற அவர், நேரமாகியும் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே பார்க் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'Beautiful' மூலம் அறிமுகமான பார்க் போ ரம், தென் கொரியாவின் வருடாந்திர தரவரிசையில் 19வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |