இது தான் பேசுற நேரமா? கோலி-கங்குலியை சரமாரியாக விளாசிய கபில் தேவ்!
தென் ஆப்பிரிக்கா அணி சுற்றுப்பயணத்தை வைத்துக் கொண்டு, இந்த நேரத்தில் இப்படியா நடந்து கொள்வீர்கள் என்று கோலி மற்றும் கங்குலியை முன்னாள் வீரர் கபில்தேவ் சாடியுள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் கோலி நீக்கப்பட்டதால், அவருக்கும் பிசிசிஐ-க்கும் இடையே பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், கோலி தொடர்ந்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால், ஒருநாள் மற்றும் டி20-க்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்பதால், ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இதனால் கோலிக்கும், பிசிசிஐ-க்கும் இடையே பெரிய மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போது, கோலி மற்றும் கங்குலி சொல்லும் பதில்கள் வெவ்வேறு மாதிரி உள்ளதால், உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது. இறுதியாக கங்குலி இது பிசிசிஐ பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன கபில்தேவ், இந்த விஷயத்தில் கோபப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இது போன்ற ஒரு மிகப் பெரிய தொடரை வைத்துக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசுவது சரி கிடையாது.
தென் ஆப்பிரிக்கா தொடரில் கவனம் செலுத்துங்கள், உங்கள் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்டுங்கள் என்று கூறியுள்ளார்.