இனிமே நீங்கள் வேலைக்கு வர கூடாது! வீட்டிலேயே இருங்க.. பெண்களை அடித்து துரத்திய தாலிபான்கள்
காபூலில் பெண்கள் இனி வேலைக்கு வரக்கூடாது என்று பணிக்கு வந்த பெண்களை திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சட்டதிட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
முதலில் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள கூடாது என்று தொடங்கியதை அடுத்து மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல கூடாது, பெண்கள் வெளியே சென்றால் பர்தா அணிவது அவசியம், அரசு வேலைகளில் பெண்கள் பணியாற்ற கூடாது போன்ற பல அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இந்நிலையில் காபூலில் உள்ள பெண் ஊழியர்கள் வேலைக்கு செல்ல கூடாது என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கு சென்ற பெண்கள் திரும்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி கூறியதாவது, வடிவமைப்பு, இன்ஜினியரிங் துறை மற்றும் பொது கழிப்பிடங்களை நிர்வாகம் செய்யும் பெண்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும்.
மற்ற பெண் ஊழியர்கள் வேலைக்கு வர கூடாது என்றும் ஆனால் அவர்கள் சம்பளத்தை பெற தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.