இரத்த வெள்ளத்தில் ஆப்கான் தலைநகர்: பள்ளி அருகே பயங்கர குண்டு வெடிப்பு! மாணவர்கள் உட்பட 55 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில், பள்ளி அருகே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் என்றும் குறிப்பாக சிறுமிகள் என கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியில் சனிக்கிழமை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு கார் வெடிகுண்டு மற்றும் ஒரு மோர்ட்டார் வெடிகுண்டு அடுத்தது வெடித்ததாக கூறப்பட்டுள்ளது.
Sayed ul Shuhada பள்ளி அருகே மாணவர்கள் வெளியே வரும் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஏராளமான மாணவா்கள் உள்பட 55 போ் உயிரிழந்தனா். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை மீட்புக் குழுவினா் மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். சம்பவ இடம் முழுக்க இரத்தமும் சதையுமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலை தாலிபான் அமைப்பினர் நடத்தி இருக்கக்கூடும் என ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி குற்றம் சாட்டினார்.
ஆனால், இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், இஸ்லாமிய தேச (IS) பயங்கரவாதிகளால் மட்டுமே பொதுமக்களுக்கு எதிரான இதுபோன்ற கொடூர தாக்குதலை நடத்த முடியும் என்று தெரிவித்தாா்.
The school’s name: Sayyed-ul-Shohada. It means ‘Prince of Martyrs’, a title given to Imam Hussein.
— Sayed M. Modarresi (@SayedModarresi) May 8, 2021
Who knew the 40 innocent souls that perished today, would follow in his footsteps?#ShiaGenocide #Kabul #WahhabiTerror pic.twitter.com/dhiWSJ0f4p