இரண்டாவது கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டார் கமலா ஹாரிஸ்
கொரோனாவின் இரண்டாவது கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டார் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்.
உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
100 நாட்களில் 100 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதையடுத்து இன்று தேசிய சுகாதார நிறுவனத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி அவருக்கு செலுத்தப்பட்டது.
உங்களது முறை வரும்போது தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
Today I received my second dose of the COVID-19 vaccine during a visit to @NIH. When it becomes available to you, don’t wait — get vaccinated. It's safe, easy, and it saves lives. pic.twitter.com/WRaJ3XvTCz
— Vice President Kamala Harris (@VP) January 27, 2021