சல்மான் ருஷ்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு கொந்தளித்த நடிகை கங்கனா! வெளியிட்ட பதிவு
- சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற புத்தகம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
- பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக வெளிநாடுகளில் சல்மான் ருஷ்டி பதுங்கி வாழ்ந்து வருகிறார்
இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேடையில் நின்றிருந்தபோது, மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
PC: Tolga Akmen/AFP/Getty Images
இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். சாத்தானின் வேதங்கள் அதன் காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்' என தெரிவித்துள்ளார்.
எப்போதும் சர்ச்சை கருத்துக்களை பதிவிடும் கங்கனா ரனாவத்தின் இந்த பதிவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.