இறுதிப் போட்டியில் ரோகித், கோலியை ஓரங்கட்ட நேர்ந்தால் என்ன செய்வது? கபில் தேவ் கேள்வி
இந்திய கிரிக்கெட் தனது வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதற்கு சுழற்சிக் கொள்கையை பின்பற்றும் சாத்தியம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் திறமைக்கு பற்றாக்குறை இல்லாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிட்டத்தட்ட 50 வீரர்கள் கொண்ட குழுவுடன் இருக்கிறது.
அதனால், சுழற்சி கொள்கை முக்கிய விருப்பமாக இருக்கிறது, ஆனால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு பொருந்துமா? என்ற கேள்வி நிலவுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் சுழற்சி கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கபில் தேவ் கூறியதாவது, இந்திய வீரர்களை சுழற்சி முறையில் விளையாட வைப்பது பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை.
பிசிசிஐயில் உள்ளவர்கள் இதுகுறித்து முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இது ஒரு தனிப்பட்ட நபரின் சிந்தனை செயல்முறையாக இருக்கக்கூடாது. வீரர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் குழு அமர்ந்து எவ்வளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கணக்கிட வேண்டும்.
வீரர்களை சுழற்சி முறையில் விளையாடவிட்டால், அது இக்கட்டான நிலைக்கு தள்ளலாம் என கபில் தேவ் கூறினார்.
ஒருவேளை இறுதிப் போட்டியாக இருந்து அதில் ரோகித் மற்றும் கோலி இருவரையும் ஓரங்கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது? கண்டிப்பாக பயங்கர விமர்சனங்கள் எழும்.
அதனால்தான் இந்த சுழற்சி கொள்கை எனக்கு அப்பாற்பட்டது.
நான் சொன்னது போல், வீரர்கள் குழு ஒன்று சேர வேண்டும், அது சரியான வழி என்று அவர்கள் நம்பினால், பிறகு சுழற்சி கொள்கைளை அறிமுகப்படுத்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கபில் தேவ் கூறினார்.