RCB வெற்றி கொண்டாட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை தடியடி
RCB வெற்றி கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பையை வென்ற RCB
18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
RCB அணியின் வெற்றிக்கு நாடு முழுவதும் இருந்து, சினிமா துறையினர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், நள்ளிரவே பட்டாசு வெடித்து ரசிகர்கள் RCB அணியின் வெற்றியை கொண்டாட தொடங்கினர்.
.@RCBTweets @IPL win:
— A Sharadhaa (@sharadasrinidhi) June 3, 2025
.@Bengaluru lit up like never before — fireworks in the sky, cheers in every street, and red everywhere you looked. All for #RCB! Winning the IPL wasn’t just a trophy moment, it was an emotion, a celebration that shook the city and echoed across the country.… pic.twitter.com/sNtV2PuTGZ
RCB அணியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில், விடிய விடிய ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது.
இளைஞர் உயிரிழப்பு
RCB அணியின் வெற்றியைக் கொண்டாட சிவமோகா நகரில் இளைஞர்கள் மோட்டர் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர்.
அந்த மோட்டர் சைக்கிள் பேரணியின் போது இரு மோட்டர் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், வெங்கடேஷ் நகரை சேர்ந்த 21 வயதான அபிநந்தன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனப்பா ஷெட்டி பகுதியில், இரவு வெகுநேரம் வரை ஆர்சிபி வெற்றி கொண்டாட்டங்கள் தொடர்ந்ததால், கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |