போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி தேர்வு
போலந்து அதிபர் தேர்தலில் கரோல் நவ்ரோக்கி வெற்றி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான, போலந்தின் அதிபராக பதவி வகித்து வந்த ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம், விரைவில் முடிய உள்ளது.
எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது.
கரோல் நவ்ரோக்கி வெற்றி
கடந்த 18 ஆம் திகதி நடைப்பெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில், ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும், பழமைவாத கட்சி வேட்பாளரான கரோல் நவ்ரோக்கியும்( வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவுக்கப்பட்டுள்ளன.
இதில், தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த பழமைவாத கட்சி வேட்பாளரான கரோல் நவ்ரோக்கி 50.89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
42 வயதான நவ்ரோக்கி, அண்டை நாடான உக்ரைனில் இருந்து வந்த அகதிகள் உட்பட பிற தேசிய இனங்களை விட போலந்து மக்களுக்கு சாதகமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் இருப்பதை உறுதி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார்.
வெளியுறவு கொள்கையை பொறுத்த வரையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியம் மீதும் சந்தேகம் கொண்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ஆதரவு பெற்ற இவர், கடந்தமாதம் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |