டெஸ்ட் போட்டியில் 300 ரன் அடிச்ச ஒருவரை 5 வருஷமா உட்கார வச்சிடீங்களே? இது நியாயமா? இந்திய அணி மீது ஆதங்கத்தில் முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அடுத்த மாதம் 4-ஆம் திகதி துவங்க உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பல்வேறு மாற்றங்கள் அணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக புஜாரா 3-வது இடத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கோஹ்லி விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளதால், மிடில் ஆடர் வரிசையில் ராகுல் மற்றும் விஹாரி ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
ஏனெனில் துவக்க வீரரான கில் காயம் காரணமாக வெளியேற உள்ளதால் அவருக்கு பதிலாக அகர்வால் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் விஹாரி விளையாடியதால், அதன் அனுபவத்தில் விஹாரிக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் மிடில் ஆர்டரில் கருண் நாயரை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டரில் விஹாரி சேர்க்கப்படுவது நல்ல முடிவுதான் இருப்பினும் கருண் நாயருக்கு அந்த வரிசையில் விளையாட வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஏனெனில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். பல ஆண்டுகளாக அவர் வாய்ப்புக்கு காத்திருக்கிறார் அவருக்கு இந்திய அணி கருணை காட்ட வேண்டும்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிடில் ஆர்டரில் களமிறங்கிய கருண் நாயர் முச்சதம் விளாசி அசத்தியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் இருந்தால் எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.