உடலிற்கு சத்தான கருப்பு உளுந்து பொடி சாதம்.., எப்படி செய்வது?
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், உளுந்தை பயன்படுத்தி சத்தான கருப்பு உளுந்து பொடி சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 5 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 4
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- பூண்டு- 5 பல்
- நெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- சாதம்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் எண்ணெய் சேர்த்து தோலுடன் தட்டிய பூண்டை சேர்த்து வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் வாணல் வைத்து அதில் நெய், கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இறுதியாக இதில் சாதம், அரைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கருப்பு உளுந்து சாதம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |