இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த கேட் மிடில்டன்-வில்லியம்! வெளியான புகைப்படம்
பிரித்தானியா இளவரசர் இறுதிச்சடங்கிற்காக வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் விண்ஸ்டர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர்.
பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக் கிழமை உயிரிழந்தார். இவரது மறைவு காரணமாக எட்டு நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்காக வின்ஸ்டர் மாளிகையில் செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு வருகை தந்தனர்.
இன்று பிற்கபகல் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் ராயல் தம்பதியினர் கருப்பு முகமுடி அணிந்த நிலையில் வந்தனர்.
இவர்கள் மட்டுமின்றி மற்ற ராயல்குடும்பத்தினரும், வின்ஸ்டர் மாளிகையில் செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு வருகை தந்தபடி உள்ளனர்.
குறிப்பாக இளவரசர் பிலிப்பின் பேத்தி ஜாரா பிலிப் மற்றும் அவரது கணவர் மைக் டிண்டால் ஆகியோரும் வந்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில், ராயல் குடும்பத்தினர் உட்பட 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது நினைவுகூரத்தக்கது.