அவர்களை நம்பவில்லை... ஹரி - மேகனிடம் நோய் பாதிப்பை பகிர்ந்துகொள்ளாத கேட் மிடில்டன்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தகவலை அமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு அவர் தெரியப்படுத்தவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.
கேட் - வில்லியம் தம்பதி நம்பவில்லை
இளவரசி கேட் மிடில்டனின் காணொளி வெளியான பின்னரே, இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி தகவல் அறிந்ததாகவும், அதன் பின்னரே அறிக்கை வெளியிட்டதுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில் ஹரி - மேகன் தம்பதியை கேட் மற்றும் வில்லியம் தம்பதி நம்பவில்லை என்றும், அவர்களால் தனிப்பட்ட தகவல்கள் கசியலாம் என்ற பயமே காரணம் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் சார்லஸ் மன்னர் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில், ஹரி - மேகன் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் பகிர்ந்த பின்னரே, பொதுமக்களுக்கு அறிவித்தார்.
சகோதரர்களிடையே ஆழமான பிரிவு இருப்பது உலகம் அறிந்த ரகசியம் என குறிப்பிட்டுள்ள ஒருவர், பல மாதங்களாக சகோதரர்கள் இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை என்றார்.
சுமார் நான்காண்டுகளாக முடிவில்லாத சிக்கலை எதிர்கொள்கின்றனர். அதனாலையே அவர்கள் மீது வேல்ஸ் இளவரசருக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருக்கலாம் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
காணொளி உண்மையா
கேட் - வில்லியம் தம்பதி ஹரி - மேகனை நம்பாததற்கு உறுதியான காரணங்கள் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அந்த நபர், ஹரியின் நினைவுக் குறிப்புகள் ஏற்படுத்திய விவாதம், நேர்காணல் மற்றும் ஆவணப்படங்களால் அவர்கள் அரச குடும்பத்தில் இருந்து மிகத் தொலைவில் சென்று விட்டார்கள் என்றே அந்த நபர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகத்தில் கேட் மிடில்டன் வெளியிட்ட காணொளி உண்மையா, இல்லை புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஏற்கனவே அரச குடும்பத்தில் இருந்து திருத்தப்பட்ட புகைப்படங்களை கேட் வெளியிட்டுள்ளார் என்றும், இதுவரை அதுபோன்ற ஒரு செயல் நடந்ததில்லை என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |