கேட் மிடில்டனின் அன்னையர் தின புகைப்படம் திருத்தப்பட்டது... நான்கு அடையாளங்கள் அம்பலம்
அன்னையர் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட புகைப்படமானது தற்போது பிரித்தானியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு அடையாளங்களை
தொடர்புடைய புகைப்படமானது திருத்தப்பட்டது என்பதை உறுதி செய்துள்ள முதன்மையான நான்கு சர்வதேச நிறுவனங்கள், அந்த புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய புகைப்படமானது திருத்தப்பட்டது தான் என்பதை உறுதி செய்யும் வகையில் நான்கு அடையாளங்களை அம்பலப்படுத்தியுள்ளனர் சமூக ஊடக பயனர்கள்.
மேலும், தொடர்புடைய புகைப்பட விவாதம் குறித்து அரண்மனை விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. ஜனவரியில் வயிறு தொடர்பான அறுவை சிகிச்சைகு பின்னர், கேட் மிடில்டன் பொதுவெளியில் தென்படாமல் மாயமானார்.
தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த சந்தேகங்கள், கணிப்புகள், கருத்துகள் என பெரும் விவாதம் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு கேட் மிடில்டன் தமது இன்ஸ்டா பக்கத்தில் குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார்.
அதில் இளவரசர் வில்லியம் தவிர்க்கப்பட்டிருந்தார். மேலும், வெளியான புகைப்படமும் திருத்தப்பட்டது என்ற விவாதம் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. குட்டி இளவரசர் லூயிசின் கைகள் அவர் அணிந்திருக்கும் உடை, கேட் மிடில்டனின் மாயமான திருமண மோதிரம்,
அரண்மனை உண்மையை மறைப்பதாக
குட்டி இளவரசியின் பாதி காணாமல் போன ஸ்லீவ் மற்றும் நிறம் மங்கலான பாவாடை என பட்டியலிட்டுள்ளனர். முதன்மையான நிறுவனங்கள் பல, அந்த புகைப்படம் திருத்தப்பட்டது என்ற அச்சம் காரணமாக பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையிலும்,
அரண்மனை சமூக ஊடக பக்கத்தில் தொடர்புடைய புகைப்படம் தற்போதும் காணப்படுகிறது. திருத்தப்பட்ட புகைப்படம், மெளனம் காக்கும் அரண்மனை உள்ளிட்டவை, உண்மையில் கேட் மிடில்டன் எங்கே என்ற கேள்வியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கேட் மிடில்டன் விவகாரத்தில் அரண்மனை உண்மையை மறைப்பதாகவும் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |