நடுவானில் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானப் பயணிகள்... கதை முடிந்ததென்று சிலர்
நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் ஒன்று திடீரென்று தொழில்நுட்ப கோளாறில் சிக்க 50 பேர் காயங்களுடன் தப்பிய சம்பவம் வெளியாகியுள்ளது.
50 பயணிகளுக்கு சிகிச்சை
திங்களன்று உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 3.58 மணிக்கு ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்து 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்திற்கு விரைந்துள்ளது.
இந்த நிலையில் தரையிறங்கிய Latam பயணிகள் விமானத்தில் 50 பயணிகளுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் 13 பேர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமார் 50 பயணிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை மருத்துவப் பிரிவே சிகிச்சை அளித்துள்ளது.
ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நடந்த சம்பவத்தை பயணி ஒருவர் விவரிக்கையில்,
விமானம் செங்குத்தாக தரை நோக்கி
மூன்று மணி நேர பயணத்தில், அந்த விமானமானது திடீரென்று சுமார் 2 மணி நேரம் வானத்தில் இருந்து கீழே விழுந்தது. பயணிகள் பலர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். சிலர் விமானத்தின் கூரையில் மோதினர்.
மொத்த விமானமும் அலறல் சத்தத்தால் அதிர்ந்தது. திடீரென்று அந்த விமானம் செங்குத்தாக தரை நோக்கி பாய்ந்தது. அத்துடன் அனைவரது கதையும் முடிந்தது என்றே எண்ணினோம் என பீதியில் இருந்து விடுபடாமல் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடக்கும் போது பெரும்பாலான பயணிகள் இருக்கை பெல்ட் அணிந்திருக்கவில்லை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் உரிய நேரத்தில் அந்த விமானம் ஆக்லாந்து விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |