கஜகஸ்தான் சுரங்கத்தில் கோர விபத்து : 32 பேர் உயிரிழப்பு!
மத்திய ஆசிய நாட்டான கஜகஸ்தானில் ArcelorMittal நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து
தீ விபத்தானது இன்று காலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதில் 32 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணையை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |